Posts

Showing posts from August, 2020
Image
 சக்கரவர்த்தி கீரை.: மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி பார்ப்போம். கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது. ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும். சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!*

Image
 *மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!* ◆கோவைக்காய் - 5 ◆சின்ன வெங்காயம் - 5 ◆சீரகம் - 1/2 தேக்கரண்டி ◆சோம்பு - 1/2 தேக்கரண்டி ◆மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி ◆கொத்தமல்லி இலை - சிறிதளவு ◆கறிவேப்பிலை - சிறிதளவு முதலில் கோவைக்காயை நன்கு வேகவைத்து, அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து சூப் செய்து உணவுக்கு முன்பு 1 நாளைக்கு காலை மாலை என 2 வேளை 10 நாளைக்குத் தொடந்து எடுத்துக்கொள்ளவும்.. அதிக மூலம் உள்ளவர்கள் 30 நாள் வரை எடுக்கலாம். __________________________________________________ 5 துத்தி இலையை பறித்து வந்து ௮தை விளக்கெண்ணெயில் வதக்கி ௮தை ஒரு துணியில் வைத்து கோமணமாக கட்டிக் கொண்டு இரவில் தூக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்ய மூல நோய் முற்றிலும் குணமாகும்.  ___________________________________________________ பிடிகருணை யை காரம்குறைத்து மசியல் செய்து சாப்பிடலாம் பிரண்டை சின்னவெங்காயம்இரண்டும் நெய்யில்வதக்கிதுவையல்செய்துசாப்பிட்டால் மூலநோய். குணமாகும் ____________________________________________________

ஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி |

Image
  ஏ.ஆர்.முருகதாஸுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி | 

1GB Data = Rs.100 ??? என்ன கொடுமை சார் இது ?

Image
  1GB Data = Rs.100 ??? என்ன கொடுமை சார் இது ? ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல் விரைவில் கட்டண உயர்வு கூறியுள்ளார்  மிட்டல் சந்தாதாரர்களிடம் ‘இன்னும் நிறைய பணம் செலுத்தத் தயாராகுங்கள்’ - கட்டண உயர்வு குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். 

கில்லி சிவா சல்லி சல்லியா நொறுக்கிடாரு..!ஒரே ஒரு போஸ்டர் தான்..!

Image
  கில்லி சிவா சல்லி சல்லியா நொறுக்கிடாரு..!ஒரே ஒரு போஸ்டர் தான்..!

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி

Image
 தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி.: கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. கீழாநெல்லியின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து நசுக்கி பால் அல்லது மோரில் கலந்து குடிக்கும்போது ஈரல் நோய்கள் சரியாகும். சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது. எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரி

காலையில்_3_சின்ன வெங்காயத்தை_சாப்பிட்டால் கிடைக்கும்_நன்மைகள்

Image
 காலையில்_3_சின்ன வெங்காயத்தை_சாப்பிட்டால் கிடைக்கும்_நன்மைகள்  தினமும் காலையில் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது .என்று ம் வெங்காயம் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சின்ன வெங்காயத்தை காலையில் மென்று தின்று நீராகாரம் பருகி வந்தால் நன்கு உழைக்கும் ஆற்றல் நம்முடைய உடலுக்கு கிடைக்கும். வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி அதை நீரில் ஊறவைத்து வெங்காய துண்டுகள் நன்கு ஊறியதும் நீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு காலையிலும் மாலையிலும் அந்த நீரை அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 முதல் 20 நாட்கள் வரை அருந்தி வந்தால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். வெங்காயம் பக்கவாத நோய்களை வரவிடாமல் செய்யும் தன்மை கொண்டது. பச்சையாக காலை வேளையில் வெங்காயத்தை உட்கொண்டு வரும்பொழுது பக்கவாத நோய்கள் வராது. உடல் சூட்டை தணிக்க கூடிய சின்னவெங்காயம் மூலச்சூட்டைத் தணிக்கும் ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. காலை வேளையில் இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும்பொழுது சிறுநீரகம் சம்பந்தமாக உள்ள பிரச்சினைகள் தீரும். காலையில் நாம் மென்று விழுங்கும் வெங்க

பனையைவெட்டினால்....!!! #நதிகள்_வறண்டுபோகும்

Image
 #பனையைவெட்டினால்....!!! #நதிகள்_வறண்டுபோகும்...!!!! முன்னோர்களின் தொலைநோக்குசிந்தனை பற்றிய ஒரு அலசல்....!! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை..  அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.  இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.  இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு

கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்???? இந்த 4 அணைகளுக்கெல்லாம் அப்பன், நம்ம #மேட்டூர் அணை ஒன்றே போதும்..

Image
 #மேட்டூர்_அணை-  கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்???? இந்த 4 அணைகளுக்கெல்லாம் அப்பன், நம்ம #மேட்டூர் அணை ஒன்றே போதும்.. இவைகளை விழுங்க..!!!! காவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4-அணைகள்தான். 1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி.. 2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி.. 3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி... 4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி.. -என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்... இவ்வளவு தண்ணீரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு) நம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும். அதாவது ஒரு #TMC தண்ணீர் என்பது 'One Thousand Million Cubic Feet' அதாவது 100,00,00,000. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்.. ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர். அதாவது ஒரு #டிஎம்சி தண்ணீரை #பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால்..

அருகம்புல் - ஒற்றைமூலிகை பயன்கள்:-

Image
  அருகம்புல் - ஒற்றைமூலிகை பயன்கள்:- 1. அருகம்புல் பசையை வெட்டுக் காயங்களின் மீது பூசிவர அவை விரைவில் குணமாகும். 2. அருகம்புல் சாறு சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாவதுடன் கண் பார்வையும் தெளிவடையும். 3. அருகம்புல், சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும். 4. அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து, 200 மி.லி. காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து, காலை வேளையில் மட்டும் இரண்டு வாரங்கள் ‍தொடர்ந்து குடித்துவர மூலம், இரத்த மூலம் ஆகியவை கட்டுப்படும். 5. எலுமிச்சம்பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து, காலை வேளையில் 10 நாட்கள் வரை தொடர்ந்து குடித்துவர வெட்டை நோய் குணமாகும்.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாட்டி வைத்தியம்

Image
  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாட்டி வைத்தியம் • சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.. * அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். * விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். * நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. * வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். * பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்ச

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது

Image
 சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது பொதுவாகப் பெண்களுக்கும் சரி ஆண்களும் சரி 40 வயதை கடந்தாலே இடுப்பு வலி ,கால் வலி, மூட்டு வலி என பல வியாதிகள் வந்து விடுகிறது. அனைத்து எலும்புகளும் சுண்ணாம்புச்சத்தாள் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி உங்களது சுண்ணாம்புச் சத்து உடலில் குறையும்போது ஆங்காங்கே மூட்டுகளில் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த வலிகளுக்கு நிவாரணியாக ஒன்றை தேட வேண்டும் என்றால் அது சுண்ணாம்புச் சத்துள்ள பொருட்களை உண்பது தான்.. பொதுவாக பெண்களுக்கு 40 வயதுகளை கிடந்தால் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.தமக்கு சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளது என நினைத்துக் கொண்டு அவர்களே மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் கடைகளில் சென்று கால்சியம் மாத்திரைகளை வாங்கி உண்பார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதலான ஒன்று. இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் சிறியவர்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. இதனால் ஆரோக்கியமான இயற்கை முறையை எப்படி பயன்படுத்தலாம்? வா

திருப்புகழ்

 #திருப்புகழ் சரவண பவநிதி யறுமுக குருபர      சரவண பவநிதி யறுமுக குருபர           சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு      சனனம ரணமதை யொழிவுற சிவமுற           தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென      வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ           கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்      கலகமி னையதுள கழியவும் நிலைபெற           கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய      குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்           சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர்      மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ           திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்      மருகனெ னவெவரு மதிசய முடையவ           அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென      வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற           அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே. ......... சொல் விள

வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும்

Image
 வாழைப்பழத்துடன் சீரகம் சாப்பிட்டால் இப்படி ஒன்று நடக்கும்! நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை. சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளிய பழம். இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍மாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும். மேலும் உடலில் இருக் கும் தேவையற்ற‍ கெட்ட‍கொழுப்புக்க‍ள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.

*சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்*

Image
 *சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்*  ஏலக்காய் இனிப்பு மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை மற்றும் ருசிக்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல்நல குறைபாடுகளுக்கு அருமருந்து என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். ஏலக்காயின் தாக்கம் ஏறத்தாழ ஹைடோஸ் போல மிகவும் வீரியம் உடையது, எனவே, இதை சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக ஏலக்காய் சேர்ப்பது நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்க கூடும் வாய் துர்நாற்றம்:-  வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். பசி:-  ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்  இது பலரும் அறியாத இதன் நன்மை ஆகும். பாலை சுட வைத்து, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து தின

பூங்கார் அரிசி :நமது பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்று பூங்கார் அரிசி

Image
 நமது பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்று பூங்கார் அரிசி  பூங்கார் அரிசி : *பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம். *தமிழகத்தில் அதிகம் பயிரிடக்கூடிய இந்த பாரம்பரிய வகை நெல், 70 நாள் பயிர். எந்த தட்பவெப்ப நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் வளரும்; குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் தரும் பயிர். *கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது. குழந்தைப் பேறுக்கு உதவும். முக்கியமாக, பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும். *எந்த வகையான பாரம்பரிய அரிசியாக இருந்தாலும், இரண்டு முறை கழுவிய பின், எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறிய தண்ணீரிலேயே வேக வைக்கலாம். இது இன்னும், சுவையைக் கூட்டிக் கொடுக்கும். *பூங்கார் அரிசியை வேக வைத்து, சாதமாக சாப்பிடலாம் அல்லது அரி

நமது பாரம்பரிய அரிசி யில் ஒன்று குருவிக்கார் அரிசி

Image
நமது   பாரம்பரிய அரிசி யில் ஒன்று குருவிக்கார் அரிசி  குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும்(Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre)அதிகம். குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits): இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது.  இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது. நோயளிகளுக்கு இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள்(Recovery). குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால்(Breast feeding)அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.

நரிப்பயறு இது ஒரு மானாவரி பயிர். ஆனாலும் சத்துக்கள் மிகுந்தது.

Image
நரிப்பயறு இது ஒரு மானாவரி பயிர். ஆனாலும் சத்துக்கள் மிகுந்தது. இதில் நார்ச்சத்து,கால்சியம்,புரதம்,பாஸ்பரஸ், மக்னீசியம்,இரும்புசத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்திருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும் இந்த நரிப்பயிரை முளைகட்டி உண்பது சிறப்பு.  பார்க்க பாசிப்பறு போல் இருந்தாலும் உருவத்தில் அதைவிட சிறியது. இதனை அவித்து தேங்காய் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் சத்தும் சுவையும் அதிகம். இதை வறுத்து உடைத்து தேங்காய்பால்,கற்கண்டு சேர்த்து பால்கஞ்சியாக குடித்தால் நெஞ்சில் உள்ள சளியை போக்கி கபத்தை குறைக்கும். நரிப்பயிரை வறுத்து பொடித்து தேங்காய்,வெல்லம்,ஏலக்காய் சேர்த்து உருண்டை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுவையை தரும். முளைகட்டி உண்பதால் சர்க்கரை,நீரழிவு நோய்களை கட்டுபடுத்தும் ஆற்றல் நரிப்பயிறுக்கு உண்டு. ஒரே ஆறுதல் நரிப்பயிரை இன்னும் ஒட்டு ரகமாக மாற்றாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.  நரிப்பயிர் என்றாலே அது நாட்டுரகம்தான்.

வரலாற்றில்_இன்று

Image
 #வரலாற்றில்_இன்று ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை கட்டப்பட்டு நேற்று முதல் 66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 120 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது பவானிசாகர் அணை.  இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-ம் ஆண்டு பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் செலவில் அணையின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த பணி 1955-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி நிறைவு பெற்றது. அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பவானிசாகர் அணை தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. தெற்கு ஆசியாவின் ம

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ?

Image
 சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்      பழங்காலம் முதல் இன்று வரை தேனிற்கு இருக்கும் மௌசு சிறிதும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விருந்து, மருந்து என இரண்டிலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்காலத்தை போல அல்லாமல் இன்று செயற்கை முறையில் வளர்ப்பு தேனீக்கள் மூலம் தேனை எடுத்து பலர் மார்க்கெட்டில் விற்கின்றனர். சூப்பர் மார்கெட்டிற்கு சென்றால் அங்கு தேன் பாட்டில்கள் பளபளக்கின்றன. அதை கண்டு நாமும் அதை வாங்கி உண்கின்றோன் ஆனால் இந்த வர்த்தக சூழலில் தேனில் கலப்படம் என்பது நிச்சயம் இருக்க தான் செய்கிறது. தேனில் உள்ள மருத்துவ குணங்களை உணர்ந்து பலர் தேனை வாங்குகின்றனர். ஆனால் சிலர் வணிக நோக்கத்திற்காக தேனில் வெள்ளை சக்கரை போன்றவற்றை கலந்து அதன் மகத்துவதையே பாழாக்கு கின்றனர். இந்த நிலையில் நாம் வாங்கும் தேன் சுத்தமானதா என்பதை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள். சோதனை முறை 1: ஒரு சின்ன பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேனை விட்டால் அந்த தேன் கரையாமல் அப்படியே பாத்திரத்தின் கீழ் சென்றால் அது நல்ல தேன். இதற்கு

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்.. அப்படியென்ன சிறப்பு ஆவணி மாதத்தில்?

Image
 ஆவணி  ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்.. அப்படியென்ன சிறப்பு ஆவணி மாதத்தில்? ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும்போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனை தரும். ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் : தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.  'ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும்" என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்யமாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக சொல்வார்கள். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை : ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞ

சிறந்த இயற்கை மருந்தாக பயன்படும் புதினா...!!

Image
 சிறந்த இயற்கை மருந்தாக பயன்படும் புதினா...!! புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வு

முன்னோர்களின் பாரம்பரியநெல்_சேமிப்புகலன்கள் பற்றி அறிவீர்களா???

Image
 முன்னோர்களின் பாரம்பரியநெல்_சேமிப்புகலன்கள் பற்றி அறிவீர்களா??? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்த மன்னன் தான் கரிகாலச்சோழன். மாடு கட்டி போரடித்தால் மாளாது என்பதால், யானை கட்டி போரடித்த நாடு தான் சோழநாடு. சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். அதனால் தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது.  அந்த காலத்திலேயே கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் உட்கார திண்ணை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும்

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் #பசுந்தீவனவிதை_வழங்கல்..!!

Image
தமிழக விவசாயிகளுக்கான  மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  #பசுந்தீவனவிதை_வழங்கல்..!! ●மாநில அரசின் நிதியுதவியுடன் கால்நடை விவசாயிகள் பசுந்தீவனப் பயிர், அடர் தீவனம் உற்பத்தி செய்து பயன் பெறுமாறு கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. ●தற்போது மழை காலம் என்பதால் கால்நடைகளுக்கான பசுந்தீவனப் பயிர் கிடைப்பதில் சிரமம் இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு கடந்த சில வருடங்களாக மானிய விலையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறது.  ●அந்த வகையில் இம்முறை கரூர் மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கரில் பசுந்தீவன சாகுபடிக்கு இலவசமாக விதைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கால்நடைத் துறை அறிவித்துள்ளது. ●அதிகரித்து வரும் பால், இறைச்சி தேவையை கருத்தில் கொண்டு, கால்நடை வளர்ப்பு, பசுந்தீவனப் பயிர் வளர்ப்பு மற்றும் அடர் தீவன வளர்ப்பை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப் படுத்தி வருகிறது. ● ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டங்களையும், மானியங்களையும் அறிவித்து வருகிறது. தற்போது கரூர் மாவட்டத்தில், மானாவாரியில், 2,000 ஏக்கர் பரப்பளவில் சோளம் மற்றும் தட்டைப்பயறு வகைகள் சாகுபடி செய்ய முற்றிலும்

+92 எண் அழைப்புகளுக்கு பதில் கூறாதீர்கள்

Image
 +92 எண் அழைப்புகளுக்கு பதில் கூறாதீர்கள்  missed call திரும்ப அழைக்காதீர்கள் இனைய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

இன்று ஒரு திருக்குறள்

Image
 குறள் :  இன்று ஒரு திருக்குறள்  இயற்றியவர் தெய்வ புலவர் திருவள்ளுவர் கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி  மு.வ உரை :                       கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல ; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும் .  சாலமன் பாப்பையா உரை :                       தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன ; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும் .  கலைஞர் உரை :                       ஒருவர்க்கு வாழ்வும் , தாழ்வும் உலக இயற்கை ; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும் .

Maaveeran Kittu - Vishnu Vishal, Sri Divya, R.Parthiepan | D.Imman | Suseenthiran | Full Movie HD

Image
 Maaveeran Kittu - Vishnu Vishal, Sri Divya, R.Parthiepan | D.Imman | Suseenthiran | Full Movie HD திரைப்படக் கதை கிட்டு என்ற தலித்தை கையாள்கிறது, அவர் ஒரு உயர் வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த கோமதியை காதலிக்கிறார். கிராமவாசிகள் தங்கள் உறவைப் பற்றி அறிந்ததும், அவர்கள் கோமதியின் தந்தையை கொன்று, பழியை கிட்டு மீது போடுகிறார்கள்.   திரைப்படம்: மாவீரன் கிட்டு  ஸ்டார்காஸ்ட்: விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, ஆர்.பார்த்தீபன், சூரி, ஹரிஷ் உத்தமான், நாகினீடு  இயக்கியவர்: சுசீந்திரன்  இசை: டி. இம்மான்  உரையாடல் & பாடல்: யுகபாரதி

திருக்குறள். தினம் ஒரு குறள்

Image
தினம் ஒரு குறள் இயற்றியவர் தெய்வ புலவர் திருவள்ளுவர்   குறள் :  தக்கார் தகவிலர் என்ப தவரவர்          எச்சத்தாற் காணப் படும்  மு.வ உரை :                         நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் .  சாலமன் பாப்பையா உரை :                   இவர் நீதியாளர் , இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம் , புகழ் , பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம் .  கலைஞர் உரை :                       ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி , நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும். 

Valai Pechu | விரைவில் விஜய் கட்சி? |

Image
Valai Pechu | விரைவில் விஜய் கட்சி சினிமா துறையில் உள்ள அனைத்து வகையான செய்திகளையும் தொகுத்துத் தரும் வலைப் பேச்சு யு டியூப் சேனலில் நடிகர் விஜய் கட்சி தொடங்க தேவையான அடிப்படை நடைமுறை குறித்து வழக்கறிஞர் களிடம் ஆலோசனை நடைபெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

ரொம்ப நல்லவான் டா நீ -புதிய தமிழ் திரைப்படம் | மிர்ச்சி செந்தில் | பிளாக்பஸ்டர் தமிழ் திரைப்படம்

Image
  ரோம்ப நல்லவான் டா நீ சமீபத்திய தமிழ் முழு திரைப்படம் |  மிர்ச்சி செந்தில் |   Rombha Nallavan Da Nee Latest Tamil Full Movie on Thamizh Padam. Rombha Nallavan Da Nee, written and directed by A. Venkatesh, features Mirchi Senthil and Shruty Bala in the leading roles, while Sarvajeeth plays a pivotal supporting roles. Produced by Deepak Kumar R. Nair and Sarvajeeth. Music is composed by Ram Surender. Synopsis: In an inebriated state, Baskar decides to self-destruct himself and shares his problems with a stranger. The man turns out to be a Hit-Man and starts assassinating those who troubled Baskar. Cast Details: Mirchi Senthil, Shruty Bala, Sarvajeeth, Robo Shankar, Imman Annachi and others.

தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றுவதாக நடிகர் யோகிபாபு குற்றச்சாட்டு

Image
 தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றுவதாக நடிகர் யோகிபாபு குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், யானைகளின் எண்ணிக்கை, 1,200 என உயர்ந்துள்ளது

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், யானைகளின் எண்ணிக்கை, 1,200 என உயர்ந்துள்ளது. Add caption  1,455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை, யானை, மான், குரங்கு உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும், அதிகளவில் யானைகளும் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், சத்தியமங்கலம், ஆசனூர் உள்பட, பத்து வனச்சரகங்கள் உள்ளன.  இதில், அடர்ந்த புலிகள் காப்பக பகுதியான ஆசனூர், தலமலை, தெங்குமரஹடா போன்ற பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மலைப்பகுதி காடுகள் பசுமை படர்ந்து, குட்டைகளில் நீர் நிரம்பி கண்ணுக்கு இனிமையாக காணப்படுகிறது. இதனால், யானைகள் தண்ணீர், உணவு தேடி கிராமத்துக்குள் புகும் நிலை குறைந்துள்ளது.  'யானைகளால் காடுகள் காக்கப்படுவதாகவும், யானைகள் மனிதர்களுடன் இணைந்து வாழ பழகி கொள்வதாலும், பாதுகாக்கப்பட வேண்டும்' என, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால், சத்தியமங்கலம் வ

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி