ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், யானைகளின் எண்ணிக்கை, 1,200 என உயர்ந்துள்ளது. Add caption 1,455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை, யானை, மான், குரங்கு உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. மேலும், அதிகளவில் யானைகளும் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில், சத்தியமங்கலம், ஆசனூர் உள்பட, பத்து வனச்சரகங்கள் உள்ளன. இதில், அடர்ந்த புலிகள் காப்பக பகுதியான ஆசனூர், தலமலை, தெங்குமரஹடா போன்ற பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மலைப்பகுதி காடுகள் பசுமை படர்ந்து, குட்டைகளில் நீர் நிரம்பி கண்ணுக்கு இனிமையாக காணப்படுகிறது. இதனால், யானைகள் தண்ணீர், உணவு தேடி கிராமத்துக்குள் புகும் நிலை குறைந்துள்ளது. 'யானைகளால் காடுகள் காக்கப்படுவதாகவும், யானைகள் மனிதர்களுடன் இணைந்து வாழ பழகி கொள்வதாலும், பாதுகாக்கப்பட வேண்டும்' என, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால், சத்தியமங்கலம் வ