திருக்குறள். தினம் ஒரு குறள்

தினம் ஒரு குறள்

இயற்றியவர்

தெய்வ புலவர் திருவள்ளுவர்


 




குறள் : 

தக்கார் தகவிலர் என்ப தவரவர்          எச்சத்தாற் காணப் படும் 


மு.வ உரை : 

                       நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் . 

சாலமன் பாப்பையா உரை : 

                 இவர் நீதியாளர் , இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம் , புகழ் , பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம் . 

கலைஞர் உரை : 

                     ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி , நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும். 

Comments

Popular posts from this blog

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், மனு திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி