நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டு 266 ரயில்களும், 2019-20-ஆம் ஆண்டு 153 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹுமசஃபர், தேஜாஸ், அந்த்யோத்யா, உத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு குளிர்பதன பயணிகள் சேவை (உதய்) உள்ளிட்டவற்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது, 2020 மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை 53585 சரக்கு ரயில்களும், 3826 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. 2020 மார்ச் 25 முதல் 2021 ஜனவரி 27 வரை 318142 சரக்கு ரயில்களும், 8899 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய 63 ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,900-க்கும் அதிகமான பெட்டிகளில்