சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம் - கட்டிகளை போக்கும் ! குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது . வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை , மாலை கொடுக்க சளி , இருமல் குணமாகும் . அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும் . வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு வேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும் . நுரையீரல் நோய்கள் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் , ஜன்னிக்கு , வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி , கோரோசனை , சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும் . சளி , இருமல் , மாந்தம் , இழுப்பும் குணமாகும் . நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும் , இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும் . வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும் , விதைப்பையில் ஏற்படும் வலி , வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட