Posts

Showing posts from October, 2020

உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற உதவும் வெற்றிலை

Image
 உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்ற உதவும் வெற்றிலை.: வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப் பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கிவிடும். தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த் துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். கொழுந்து வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்

சாமந்திப் பூவில் மருத்துவ குணங்கள்.

Image
 சாமந்திப் பூவில் மருத்துவ குணங்கள்.: சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். சாமந்தி பூ எளிதில் கிடைக்ககூடியது தான் அதில் நிறைந்துள்ள பல நன்மைகள் உள்ளது. சாமந்திப் பூவை நன்றாக காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலக்கினால் சாமந்திப் பூ தேநீர் தயார். இதை குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்து அதிகமான  அளவில் கிடைக்கும். உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும். சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில்  குறையும்.  உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம்

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவு பொருள்கள்

Image
 வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவு பொருள்கள்.... 1 சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2 தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 3 மாத்திரைகள் எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். 4 ஆல்கஹால் பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். 5 காரமான

சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம் - கட்டிகளை போக்கும் !

Image
 சளியை குணமாக்கும் வெற்றிலை ரசம் - கட்டிகளை போக்கும் !   குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது .  வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை , மாலை கொடுக்க சளி , இருமல் குணமாகும் .  அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும் . வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு வேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும் .  நுரையீரல் நோய்கள் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் , ஜன்னிக்கு , வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி , கோரோசனை , சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும் . சளி , இருமல் , மாந்தம் , இழுப்பும் குணமாகும் .  நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும் , இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும் . வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும் , விதைப்பையில் ஏற்படும் வலி , வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இடையிலான ட்ரீம் 11 ஐபிஎல்லின் போட்டி முன்னோட்டம்

Image
 சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இடையிலான ட்ரீம் 11 ஐபிஎல்லின் போட்டி 14 இன் முன்னோட்டத்தைப் பார்க்க உள்ளோம்.  முன்னோட்டத்துடன் சில பகுப்பாய்வு மற்றும் கணிப்புகளையும் பார்ப்போம்.  முதலில் ஹெட் டு ஹெட் போர்களைப் பார்ப்போம்  ட்ரீம் 11 ஐபிஎல்லில் இரு அணிகளும் 13 முறை ஒருவருக்கொருவர் விளையாடியுள்ளன  அந்த 13 ஆட்டங்களில் சிஎஸ்கே அவற்றில் 10 ஆட்டங்களை வெல்ல முடிகிறது, எஸ்ஆர்ஹெச் 3 ஆட்டங்களில் வென்றது  2018 முதல் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் ஆறு முறை விளையாடியுள்ளன  அந்த ஆறு போட்டிகளில் சி.எஸ்.கே ஐந்து போட்டிகளில் வென்றது, எஸ்.ஆர்.எச் ஒரு ஆட்டத்தில் வென்றது.  முதலில் சிஎஸ்கேவைப் பார்ப்போம்.  நாம் சி.எஸ்.கே.  சி.எஸ்.கே அணியின் மிகப்பெரிய வலிமை அவர்களின் பேட்டிங் ஆழம்  அனுபவம் வாய்ந்த நடுத்தர வரிசையை வைத்திருந்தாலும் அவர்கள் இன்னும் கிளிக் செய்யவில்லை.  சி.எஸ்.கே-க்கு மிகப்பெரிய நேர்மறை சாம் குர்ரான்  அவர் இதுவரை பந்தைக் கவர்ந்தவர், மேலும் பேட்டிலும் பங்களிப்பு செய்துள்ளார்.  மற்றொரு சாதகமான விஷயம் என்னவென்றால், அவர்களின் மரண பந்துவீச்சு மேம்பட்டுள்ளது  டெத் பந்துவீச்சு

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி