Posts

Showing posts from September, 2020

பொடுகை விரட்டும் வேப்பம்பூ

Image
 பொடுகை விரட்டும் வேப்பம்பூ.: ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது  நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. ஆனால் வேப்பம்பூவை பயன்படுத்தி இயற்கை முறையில் பொடுகை விரட்டலாம். உப்பு கலக்காத காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு எண்ணெய் ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின் சீயக்காய் தேய்த்துக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். Amazing deal for you! Hair Fall Control Regime Combo: Onion Shampoo 250ml + Onion Hair Mask 200ml for just Rs. 899.0 from MamaEarth Shop Now! https://ekaro.in/enkr2020093047303275 https://ekaro.in/enkr2020093047303275 Did you know you can earn on every spend?  Apply for SBI's Simply Click Credit Card and Earn upto 10x SB

பற்களில் உள்ள கறைகள் நீங்க

Image
 பற்களில் உள்ள கறைகள் நீங்க. பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ: தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும். பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்க

பாசிப்பயறினை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள்:

Image
 பாசிப்பயறினை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதால் கிடைக்கும் பலன்கள்: பாசிப் பயறில் வைட்டமின் பி9 அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாது உப்புக்களான செம்புத்சத்து, இரும்புச்சத்து பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவும், காணப்படுகின்றன. பாசிப் பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது கண்கள், கேசம், நகங்கள் கல்லீரரால், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானப் பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினை துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. பாசிப் பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் புரதச்

மூட்டு வலியை குணமாக்கும் துத்திக் கீரை. துத்திக் கீரையின் பயன்கள்

Image
 மூட்டு வலியை குணமாக்கும் துத்திக் கீரை இந்த காலகட்டத்தில் வயதானவருக்கு மட்டுமின்றி இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை மூட்டு வலி முழங்கால் வலி. அதுவும் இன்றைய சூழலில் இளம் வயதிலேயே இந்த மூட்டுவலி பிரச்சினை இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு துத்திக்கீரை மிகச் சிறந்த நிவாரணியாகும். துத்தி கீரையின் அற்புதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். துத்திக் கீரையின் பயன்கள்.: கசகசா துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து அரைத்து தடவ மூட்டுவலி குறையும். துத்திக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர இடுப்பு வலியும் குறையும். துத்தி இலையை பொடிசெய்து தடவி வர தோல் நோய்கள் குறையும். பாலில் துத்திப் பூவை பொடி செய்து நாட்டு சக்கரை கலந்து அருந்திவர கபம் தீரும். துத்திக்கீரை கசாயத்தை நாட்டுசக்கரை சேர்த்து அருந்தி வர குடல் புண் குறையும். துத்திப் பூவை பொடிசெய்து கற்கண்டு பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்‌ துத்திக் கீரை மற்றும் கடுக்காய் இவற்றை கசாயமாக்கி சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குறையும். Did you know you can earn on every spend?  Apply for SBI's Simply Click Credit Card and Earn upto 1

அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்.:

Image
 அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்.: அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும். இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்த்து, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும். இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், குளிரை இக்கீரை குணப்படுத்தும். இக்கீரையை அரைத்து சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும். இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.  இக்கீரையோடு அதிக வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும். இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும். இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும். உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படு

ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்.

Image
 ♦ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்.♦ ஆரோக்கியமான வாழ்வை விரும்புவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகளை செய்வது என்று சில ஆரோக்கியமான விடயங்களை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக கோடையில் உடலை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் வாங்கி வந்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீர்ச்சத்தானது அதிக அளவில் தேவைப்படும். மேலும் புரோட்டீன், வைட்டமின் போன்றவைகளும் அதிகம் தேவைப்படுவதால், அத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை சாப்பிட முடியாவிட்டாலும், கோடையில் அத்தகைய சத்துக்கள் நிறைந்த பழங்களையாவது சாப்பிட வேண்டும். இதோ ஆரோக்கியத்துடன், குளிர்ச்சி தரும் பழங்கள் உங்களுக்காக, ♦வாழைப்பழம் வாழைப்பழம் எப்போதுமே எனர்ஜியை அதிகம் உள்ளடக்கிய பழங்களில் ஒன்று. எனவே இத்தகைய வாழைப்பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ♦தர்பூசணி தர்பூசணியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதி

தினமும் இரவு ஒரு டீஸ்பூன் #தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

Image
 தினமும் இரவு ஒரு டீஸ்பூன் #தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்! பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு காரணம் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதற்காகத் தான். சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதனால் தான் இயற்கை வைத்தியங்களில் தேன் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன. முக்கியமாக தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். இத்தகைய தேனை ஒருவர் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா? இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தினமும் தேனை சாப்பிட்டு வாருங்கள். #இரத்

மருத்துவ குணம் நிறைந்த நாயுருவி இலை

Image
 மருத்துவ குணம் நிறைந்த நாயுருவி இலை.: நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும். நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும். நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும். நாயுருவி இலையை அரைத்து நெல்ல

சித்த வைத்தியத்தில் சீந்தில் கொடியின் முக்கியத்துவம்.:

Image
 சித்த வைத்தியத்தில் சீந்தில் கொடியின் முக்கியத்துவம்.: பெண்களை அதிகமாக தாக்கக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். சீந்தில் கொடிகளை நன்றாக காயவைத்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலத்தை தரும். சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளை பலமடைய செய்யும். பிற மருந்தின் சேர்க்கையுடன் நீரிழிவு, காமாலை, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, மூர்ச்சை ஆகிய நோய்களை த

அற்புத மூலிகை பொருட்களும் அதன் பயன்களும்

Image
 அற்புத மூலிகை பொருட்களும் அதன் பயன்களும்.: ஓமம்:  ஓமம் ஒரு சிறந்த ஜீரண மருந்து மற்றும் நரம்புகளைத் தூண்டி விட வல்லது. உடல் எடையைக் குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். மேலும் மூட்டு வலிகளை நீக்கவும் வாத சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் சிறந்தது. ஏலக்காய்:  வயிற்று பகுதியிலும், நுரையீரல்களிலும் ஏற்படும் அதிகப் படியான கபத்தை நீக்கும். ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சீரகம்:  சீரகம் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. சத்துக்களை உடல் உட்கிரகத்துக் கொள்ள உதவுகிறது. செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. வேப்பிலை:  வேப்பிலை மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்பு மூலிகை ஆகும். தோல் நோய்கள், தோல் பாதிப்பு, பித்தக் கோளாறுகள் ஆகியவற்றுக்குச் சிறந்த மூலிகை மருந்து ஆகும். அதிமதுரம்:  அதிமதுரம் தொண்டை கட்டை நீக்கி, அமில

உடல் நலத்தை பாதுகாக்கும் பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்

Image
 உடல் நலத்தை பாதுகாக்கும் பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள் :- பூசணிக்காயில் உடல்நல பயன்களை பற்றி கேள்விப்பட்டால் வாயடைத்து போவார்கள். பலருக்கு அதனால் கிடைக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிவதில்லை.  அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்டவர்கள் தங்கள் பாரம்பரிய உணவு பழக்கத்தில் பூசணிக்காயையும் சேர்த்திருந்தார்கள். பூசணிக்காயில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலங்கழித்தல் சுலபமாக நடக்கும். ஒரு கப் பூசணிக்காயில் 3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.   தேவையான ஆற்றல்   இதில் வளமையான அளவில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளதால், உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உதவிடும்.   உடல் எடையை குறைக்கும்   பூசணியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உங்கள் உடல் எடையை குறைக்கவும் இது உதவும். அதிக உடல் எடையை கொண்டவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.   பீட்டா கரோட்டின் நிறைந்தது   பூசணியில் உள்ள ஒளிமிக்க ஆரஞ்சு நிறம், அதில் இருக்கும் அதிகளவிலான பீட்டா கரோட்டின் அடக்கப் பொருளை வெளிக்காட்டும். பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் ஏ-யின் முன்னோடி. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கும், கண்

மலச்சிக்கலை குணமாக்கும் அத்திப்பழம்

Image
 மலச்சிக்கலை குணமாக்கும் அத்திப்பழம் அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். 3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.  4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.  5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத

சீத்தாப்பழத்தின் நன்மைகள்

Image
 சீத்தாப்பழத்தை சுவை பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும், அதன் இனிப்பு சுவைக்காக விரும்பி சாப்பிடும் பலருக்கு நன்மைகள் தெரிவதில்லை, வாருங்கள் இன்று சீத்தாப்பழத்தை நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம். சீத்தாப்பழத்தின் நன்மைகள் சீதாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நியான் மற்றும் பொட்டாசியம் கூட அடங்கியுள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் ஆரோக்கியமாகவும் அதிக எடை இன்றியும் காணப்படும். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. நினைவாற்றலை அதிகரித்து உடல் வலிமை பெற உதவுகிறது, ஆரம்பநிலை காசநோய் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றி மலச்சிக்கலை நீக்குகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்தசோகை நீக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. பித்த நோய் சம்பந்தமான கோளாறுகளை

திராட்சை பழ ஜுஸ் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள் - இயற்கை மருத்துவம்

Image
 திராட்சை பழ ஜுஸ் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள் - இயற்கை மருத்துவம்  திராட்சை பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக் அமிலத்தையும் நீக்க உதவுகின்றது. இதனால் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சீருடன் செயல் பட உதவுகின்றது. வைட்டமின்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இதை நாம் அவ்வப்போது அருந்தினால் சளி , இருமல், போன்ற வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும். முகத்தை சுத்தப்படுத்தும் :- வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது. சூரிய வ

விளாம்பழம் இயற்கை தரும் இளமை வரம்!

Image
 விளாம்பழம் இயற்கை தரும் இளமை வரம்! முரட்டு ஓட்டுடன் பார்வைக்கு சாதாரணமாக இருக்கிற விளாம் பழம், ஒரு அழகுக் கலை நிபுணருக்கு இணையானது. இதனிடம் உங்களை ஒப்படைத்துப் பாருங்களேன். இளவரசிகளின் அரசியாக ஜொலிப்பீர்கள்! வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். விளாம்பழம் இருக்க வேதனை ஏன்? இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானாலும் உலராது என்பதால், சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையை தினமும் காலையில் செய்து வந்தால் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும் உங்கள் முகம். பருவப் பெண்களை படுத்துகிற பெரும் பிரச்னை பருதான்! பருக்களை ஓடஓட விரட்டலாம். இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்! பயத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், விளாங்காய் விழுது - 2 டீஸ்பூன், பாதாம்பருப்பு - 2. இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊறவைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வி

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

Image
 ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா? தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை! மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், எப்போதும், இணைய இணைப்பில், மொபைல் பயன்பாட்டில் இருப்பது என்று நிகழ்கால சந்தோசங்களே, வருங்கால துன்பங்களாக மாறி விடுகின்றன. கால இடைவெளிகள் இல்லாத அலுவலக நடைமுறைகள், வீட்டிற்கு வந்தாலும் தொடரும் வேலைகள், குடும்ப வாழ்வில், உணவில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உள்ள வாழ்க்கை முறை காரணமாக, உடல் மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கிடைக்கும் உணவுகளை அவசரமாக சாப்பிட்டு, வேலைகளில் ஈடுபடுவதும், பணிச் சுமையால் மன அழுத்தத்தில் இருப்பதும், மிக விரைவிலேயே, தலைமுடி உதிர்வில் ஆரம்பித்து, கண் பார்வை கோளாறு, உடல் தளர்ச்சி, இரத்த பாதிப்புகள் போன்ற வியாதிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவாக, இளைய வயதிலேயே, அனைவரும் கண்ணாடி அணிவதும், தல

Breaking News | பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை |

Image
  Breaking News | பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை | 

அறிவியலும்_உண்மையும்.. பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால், எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.

Image
 #அறிவியலும்_உண்மையும்.. பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால், எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.  சிலர் பாம்பு பாலும் முட்டையும் தான் சாப்பிடும் என்பார்கள். உண்மை தெரியுமா பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லையாம்.  பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டது. அதனால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று கண்டுபிடித்துள்ளனர். இது விஞ்ஞான ரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.  ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அதாவது, மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தன. ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. எனவே,அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.  பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமான முறையில். பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் திரவத்தை வெளிப்படுத்தும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையை பால் ,முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. எனவே, அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது,

நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் எப்படி சாப்பிட்டாலும் சோம்பு தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். எப்படியாப்பட்ட தொங்கும் தொப்பையும்,உடல் எடையும் ஒரே மாதத்தில் குறையும்.

Image
 நீங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் எப்படி சாப்பிட்டாலும் சோம்பு தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். எப்படியாப்பட்ட தொங்கும் தொப்பையும்,உடல் எடையும் ஒரே மாதத்தில் குறையும்.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும்.சோம்பு நீரை தயாரிக்கும் முறையை பற்றியும் ,நீங்கள் அறிந்திராத சோம்பு நீரை பற்றிய நன்மைகள் ஏன அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் சோம்பு நீர் தயாரிக்கும் முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின்னர் கொதிக்கும் தண்ணீரை இறக்கி அதில் ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் சோம்பை சேர்த்து 10 நிமிடம் வரை மூடி வைத்துவிட வேண்டும்.பின்னர் அதன் பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதாங்க ஒரு பதினைந்து நிமிடத்தில் இந்த சோம்பு நீரை நாம் தயாரித்து விடலாம்.வருஷக்கணக்கில் உடல் எடையை குறைப்பதற்கும், மாதவிடாய் பிரச்சனையை தீர்ப்பதற்கும்,நாம் போகாத மருத்துவர் இருந்திருக்க முடியாது.வாங்க இதை எவ்வாறு குடிக்க வேண்டும் இதில் இருக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். சோம்பு நீரின் பயன்கள்! ஆயுர்வேத மருத்துவத்தி

வில்வ மரத்தின் இலைகளை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.

Image
 வில்வ மரத்தின் இலைகளை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.: மஞ்சள் காமாலை நோயால் அவதியுற்று வரும் நபர்கள் வில்வ மரத்தில் இருக்கும் இளம் வில்வ இலைகளை சுமார் 10 கிராம் முதல் 15 கிராம் அளவு இருக்குமாறு எடுத்துக்கொண்டு., அதோடு சுமார் 10 மிளகை சேர்த்து அரைத்து இருவேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோயானது குணமடையும்.  இரத்த சோகை பிரச்னையால் அவதியுறும் நபர்கள் வில்வ பழத்தை காயவைத்து பொடியாக அரைத்து பசும்பாலில் சேர்த்து காய்ச்சி தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையானது குணமடையும்.  கர்ப்பமான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டல்., இரத்த சோகை பிரச்சனையை நீக்குவதற்கு ஒரு தே.கரண்டி அளவிற்கு வில்வ பழத்தின் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.  டைபாய்டு நோயை குணப்படுத்துவதற்கு வில்வ இலையை நீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு போன்று சுண்டும் பக்குவத்தில் வந்தவுடன்., தேனை சேர்த்து மூன்று வேலை என்று தினமும் சாப்பிட்டு வந்தால் டைபாய்டு நோயானது உடனடியாக குணமடையும்.  ஞபா

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?

Image
 ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா?    இங்கு ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான். அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும். வழி #1 தேவையான பொருட்கள்: முட்டையின் மஞ்சள் கரு - 1 உப்பு - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

Image
 பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்!

Image
 உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்! நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா? அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள்.   சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம். வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது? * வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும். * வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். * வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.   * வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி