ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா? தலை முடியில் ஆரம்பித்து, சுவாசம், சருமம், இதயம், செரிமானம், இரத்த பாதிப்புகள், சிறுநீரக, மூட்டு வலிகள் என்று பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளில் அல்லல் பட்டு வருகிறது, இன்றைய தலைமுறை! மனச் சோர்வு கொள்ள வைக்கும் அலுவல் மற்றும் வாழ்க்கை முறை, ஒய்வுகளுக்கு முழு இடம் கொடுக்காமல், எப்போதும், இணைய இணைப்பில், மொபைல் பயன்பாட்டில் இருப்பது என்று நிகழ்கால சந்தோசங்களே, வருங்கால துன்பங்களாக மாறி விடுகின்றன. கால இடைவெளிகள் இல்லாத அலுவலக நடைமுறைகள், வீட்டிற்கு வந்தாலும் தொடரும் வேலைகள், குடும்ப வாழ்வில், உணவில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உள்ள வாழ்க்கை முறை காரணமாக, உடல் மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கிடைக்கும் உணவுகளை அவசரமாக சாப்பிட்டு, வேலைகளில் ஈடுபடுவதும், பணிச் சுமையால் மன அழுத்தத்தில் இருப்பதும், மிக விரைவிலேயே, தலைமுடி உதிர்வில் ஆரம்பித்து, கண் பார்வை கோளாறு, உடல் தளர்ச்சி, இரத்த பாதிப்புகள் போன்ற வியாதிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவாக, இளைய வயதிலேயே, அனைவரும் கண்ணாடி அணிவதும், தல