பணியாளர் தேர்வாணையம், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) தில்லி காவல் தேர்வு 2020-ஐ கணினி வழியாக நடத்த உள்ளது. தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்பிலிருந்து இதற்கான மின் அனுமதி சான்றிதழை பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த தகவல்கள் விண்ணப்பதாரர் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படும். தென்னிந்தியாவில் இந்தத் தேர்வு, 27.11.2020, 01.12.2020, 02.12.2020, 03.12.2020, 07.12.2020, 08.12.2020 மற்றும் 09.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறும். தென்னிந்தியாவில் 136352 பேர் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, குர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜய நகரிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர், மற்றும் வாரங்கல்லிலுமாக மொத்தம் 20 நகரங்களில் 32 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. நாள் ஒன்ற