இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மலேரியா அறிக்கை 2020-ஐ, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது: அதில் கூறியிருப்பதாவது: * இந்தியாவில் மலேரியா பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே நாடு இந்தியா. * இந்தியாவில் மலேரியா பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டு மலேரியா பாதிப்பு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் (3,38,494 பாதிப்பு, 77 உயிரிழப்பு) குறைந்துள்ளது. * 2018ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 4,29,928-ஆகவும், உயிரிழப்பு 96-ஆகவும் இருந்தது. * 2020ம் ஆண்டில் அக்டோபர் வரை இந்தியாவில் ஏற்பட்ட மொத்த மலேரியா பாதிப்பு 1,57,284. கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 45.02 சதவீதம் குறைவு. கடந்தாண்டு இதே காலத்தில் மலேரியா பாதிப்பு 2,86,091-ஆக இருந்தது. * இந்தியாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ல்