சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான (Postal Life Insurance) நேரடி முகவர்கள் (Direct Agents) தேர்வு நடைபெறுகிறது . கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு : 18 முதல் 50 வரை . சுய தொழில் செய்பவர்கள் , வேலை தேடுபவர்கள் , ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள் , முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை (Bio-Data) ( அலை பேசி எண் , பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விபரங்களுடன் ): “ முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் , சென்னை நகர வடக்கு கோட்டம் , சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் . விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.08.2021. தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர் , வேப்பேரி , எழும்பூர் , போர்ட் செயின்ட் ஜார்ஜ் , கீழ்பாக்க